வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

சபதம் எடுப்போம்

எலே இந்தியனே!
எங்கடா உன் வீரம்.
கூட்டமா கத்தினாக்கா
ஓடிடுமா ஊழல் மரம்.
வேரோடு வெட்டினா தான்
விலகுமடா வளர்ந்த மரம்.
ஒவ்வொருவனும் முடிவெடுத்தா
ஒழிச்சிடலாம் இந்த விதை.
கூட்டமா நின்னவனே !
சத்தமாய் கத்தினவனே!
சர்க்காரு ஆளுக்கு -இனி
சல்லிக்காசு கொடுக்க மாட்டேன்”
சபதமெடு.
சாபம் வாங்கி வந்தோமடா-இதை
சங்கு ஊதி புதைக்க வேணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!