திங்கள், மார்ச் 02, 2015

தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.



தாஜ்மகால் என்ற சொல்லுக்கு “ அரசியின் மணிமுடி” என்று பொருள்....
.............................................................................................
 
இந்தியாவின் தேசிய கீதம் ‘ஜன கன மன....’ என்பது தெரியும். இந்தியாவின் தேசியப்பாடல் “வந்தே மாதரம்” எனத்தொடங்கும் பாடல். இதுவும் அறிந்திருப்போம்.இதனை இயற்றியவர் பக்கிம் சந்திர சட்டர்ஜி... தெரியாத செய்தி, இப்பாடலுக்கு இசையமைத்தவர்... இரவீந்திரநாத்தாகூர் என்பது.

...............................................................................................................................................

இந்தியாவின் தேசிய சின்னம், விலங்கு, பறவை, எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு – டால்பின் ஆகும்.

.....................................................................................................................................................
இந்தியாவின் தேசிய கவிஞர்கள் இரண்டு பேர் ஆவர்.
        1)   இரவீந்திரநாத் தாகூர். 2)பக்கிம் சந்திர சட்டர்ஜி.
......................................................................................................................................................
 
இந்தியாவின் தேசிய மொழிகள் 21.

1.அசாம்சி,2.பெங்காலி,3.போடா,4.டோக்ரி,5.குஜராத்தி,6.கன்னடம்,7.காஷ்மீரி,8.கொங்கனி,9.மைத்திலி,10.மலையாளம்,11.மணிப்புரி, 12.மராத்தி,13.நேபாளி, 14.ஒரியா 15.பஞ்சாபி, 16.சமஸ்கிருதம், 17.சிந்தி, 18.சாந்தலி, 19.தமிழ், 20..தெலுங்கு, 21.உருது.
...................................................................................................................................................

தமிழ்நாட்டின் தாஜ்மகால் என்று வர்ணிக்கப்படுவது “மதுரை திருமலை நாயக்கர் மகால்.” இதன் கோபுர கடிகாரங்கள் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை.
...................................................................................................................................................

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 415.  இவற்றுள் 86 வகையான எழுத்துமுறைகள் பயன்பாட்டில் உள்ளன.
.......................................................................................................................................................

உலகிலேயே அரசியல் தலைவர்களில் லெனினுக்குத்தான் அதிகமான சிலைகள் உள்ளன.

...........................................................................................................................................
 தேசியக்கொடியின் நடுவில் உள்ள தர்மச்சக்கரத்தின் 24 ஆரங்களும் கீழ்கண்டவற்றை பிரதிபலிக்கின்றன.
  1. அன்பு
  2. பொறுமை
  3. தைரியம்
  4. சமாதானம்
  5. பெருந்தன்மை
  6. நற்குணம்
  7. உண்மை
  8. சுயநலமின்மை
  9. நேர்மை
  10. சுயக்கட்டுப்பாடு
  11. சுயதியாகம்
  12. வாய்மை
  13. நீதி
  14. கருணை
  15. அடக்கம்
  16. பச்சாதாபம்
  17. அனுதாபம்
  18. ஆன்மீக அறிவு
  19. தகவமைப்பு
  20. கடவுள் நம்பிக்கை
  21. நம்பிக்கை
  22. நல்லொழுக்கம்
  23. நன்னடத்தை
  24. இழிவுபடுத்தாமை.

10 கருத்துகள்:

  1. வணக்கம்
    யாவரும் அறிய வேண்டிய விடயம் தங்களின் பதிவு வழி அறிந்தேன் தேடலுக்கு எனது பாராட்டுக்கள் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள நல்ல தகவல்கள் நண்பா
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  3. ///இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு – டால்பின் ஆகும்.///
    வியப்பாக இருக்கிறது நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா .இது பரவலாக அறியாத ஒன்று. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. #இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை.#
    நான் பிறந்து வளர்ந்த இடம் மகால் அருகிலேயே இருப்பதால் ,அந்த கடிகாரத்தின் இனிமையான மணியோசையை கேட்டது நினைவுக்கு வருகிறது :)
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! மிக்க சந்தோஷத்துடன் நன்றிகள் பல.

      நீக்கு
  5. அருமை.....மிக மிக....சிறப்பானத் தகவல்கள்!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!