Thursday, 16 May 2013

அமாவாசையும்..... நானும்......





கா கா என கரைந்தழைத்து நீ.....
காணாத எனக்கு
கை நிறைய உணவுடன்
காத்திருக்கிறாய்....

இறகு வலிக்க
இரை தேடி
இப்பத்தான்
வந்தமர்ந்தேன்.

உன் கூப்பிடும் குரல் கேட்கிறது.

உடலில் வலுவில்லை வந்துன்
உணவை எடுக்க....
சகாக்கள் எல்லாம் சலித்துப் போய்
சரணடைந்தோம் சன்னதி மரத்தில்.

சத்தம் கேட்கிறது...


கா...கா.....


அமாவாசை விரதம் நீ முடிப்பதற்கும்
மூதாதையர் நினைவுத்
திதி நாட்களிலும் மட்டும் ...
நாங்கள் உண்டபின்...நீ..

பௌர்ணமி அன்று நாங்கள் விரதம்..

ஏனோ மனம் லயிக்கவில்லை
மனித மனம் புரியவில்லை
வராமலும் இருக்க முடியவில்லை

வறுமை கோட்டிற்கு கீழ் நாங்கள் வசிப்பதால்.


வடை பாயாசம் என்றாவதாவது கிடைக்கிறது

செத்து மடிந்து இன்று
சிறுபான்மை இனத்தவராய்
சுருங்கிப்போனோம்....

எங்கள்
சங்கதிகள் அழிந்தொழியும் காலம்
சமிபித்து விட்டதாய் எனக்குச் சந்தேகம்.


தினமும் நீங்கள் தின்றதில் மீதி
தூக்கியெறிந்தாலாவது.....எங்கள்
துயர் நீங்கும்.

இல்லையேல் ............

சில காலங்களில்
மியூசியத்தில் மட்டும்
கற்கலால்ஆன காக்கைகளுக்கு
நீங்கள் படைக்கப்போகீறீர்கள்

அது வரைக்குமாவது வந்து போகிறோம்


அனைத்துண்ணிகளாய்

உங்களைப்போல.....







Wednesday, 15 May 2013

ஜோதிடம்



"ஆயுசு நூறு"

ஆருடம் எனக்குச்

சொன்ன ஜோசியக்காரன் 

அற்ப ஆயுசில் போய் சேர்ந்தான்-

ஆக்சிடெண்டில்.

அடப்பாவி உன் ஜாதகத்தை நீயே பாக்கலீயா ?

Wednesday, 8 May 2013

இப்படி ஒரு.......






இப்படி ஒரு பொய்


உலகெங்கும் சொல்லப்படுகிறது


“ நான் சொல்வதெல்லாம் உண்மை

உண்மையை தவிர வேறெதுவும் இல்லை”.

Tuesday, 7 May 2013

தாயைத் தவிர...



சொல்ல நினைப்பதை
சொல்லத்தெரியவில்லை.

பேச நினைப்பதை
நீயே பேசி விடுகிறாய்.

நான் செய்ய வேண்டியதை- பல சமயம்
நீயே தீர்மானிக்கிறாய்.

குரலின் தொணியை வைத்தே
தீர்மானித்துவிடுகிறாய் என் தேவைகளை.

அழும்போது அழவும்

சிரிக்கும்போது சிரிக்கவும்....

எல்லாம் நன்மைக்கே!

தாயைத் தவிர

எவரால் முடியும் அத்தனையும்.



வாழ்த்த வாருங்கள்.