புதன், நவம்பர் 05, 2014

பிடித்தது....




டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?
...........................................

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!
........................................................


தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
.....................................................................

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
................................................................................................................................

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
..............................................................................................................................................

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
..................................................................................................

படிச்சி முடிச்சிட்டு என்ன செய்வ?
“புக்கை மூடிடுவேன்!
..............................................................................

“காலில் என்ன காயம்?
“செருப்பு கடித்து விட்டது
“பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!
....................................................................................................

“குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
“தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே! அதனால இருக்குமோ?”
.............................................................................................................................

“இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
“என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
..........................................................................................................................
“டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
“என்னிடம் சுத்தமா இல்ல
“பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
......................................................................

“இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
“கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
....................................................................................................

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
........................................................................................................

இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
...........................................................................................................................
மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
...........................................................................................

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பட்டெண்று வந்து வாழ்த்துரைத்த அய்யாவுக்கு பதில்- நன்றி.

      நீக்கு
  2. கடைசி ஜோக் எப்போ படித்தாலும் ரசிக வைக்கும் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. அனைத்து ஜோக்குகளும் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை! சூப்பர்! அதுவும்முதலி சொல்லப்பாட்டதுரொம்ம்ம்ம்ம்ம்ப!

    பதிலளிநீக்கு
  5. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!