செவ்வாய், மே 20, 2014

குறுங்கவிதைகள்.


கரையில்

தொலைத்தது என்னவோ


விடாமல் தேடுகிறது -


கடலலைகள்.



..........000..........


 

உன்னை


‘உஜாலாவுக்கு


மாற்றியது யார்? -


கடலின் நீலநிறம்.




 

யார்மேல் கோபம்


அலையல்ல -


சுனாமி என்றாய்.

 

.......000........... 


 உப்புநீரை 

 

நன்னீராக 

 

மாற்றும் மாயசக்தி -

 

மழை.

 

...........000.................... 

 

வானம் 

 

யாரை போட்டோ எடுக்கிறது?

 

மின்னல். 

 

 ...............000...........

 

மேகங்களின்

 

வீட்டைப்போல

 

எங்களுக்கும்.-

 

அனாதைகள்.

..........000............. 

3 கருத்துகள்:

  1. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு ஹைக்கூவும் நச்சுன்னு இருக்கு. அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் நன்று. ரசித்து படித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!