செவ்வாய், ஏப்ரல் 08, 2014

குடிகாரர்களின் பெரிய மனசு



ஒரு குடிகாரர் ரோட்டில் தள்ளாடியபடி நடந்து சென்றுக்கொண்டிருக்கிறார். மிதிவண்டி ஓட்டி வந்த நபர் அவர்மேல் மோதிவிடுகிறார். தள்ளாடியபடி எழுந்தார் குடிகாரர். மிதிவண்டி ஓட்டிவந்த நபர் குடிகாரன் என்ன சொல்லப்போகிறானோ, எப்படி திட்டப்போகிறானோ என்று பயத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார்.......................



குடிமகன்:-  “ரொம்ப தேங்க்ஸ் பா


சைக்கிள்காரர் :- “மன்னிச்சுக்கோங்க.தெரியாம வந்து இடிச்சுட்டேன்.ஆமா நீங்க எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க “


குடிமகன்:- “ நல்ல காலம் சைக்கிள் ஓட்டினு வந்து இடிச்ச. லாரியை ஓட்டினு வந்து இடிக்காம போனியே அதுக்குத்தான் “

சைக்கிள்காரர்:- ??? (பேந்த பேந்த முழித்தபடி இடத்தைவிட்டுச்செல்கிறார்)


 

இந்த குடிகாரர்களுக்கு இருக்கிறதே தங்கமான மனசு தாங்க. மன்னிக்கிற மனசும், நகைச்சுவை உணர்வும் யாருக்குங்க வரும்.

4 கருத்துகள்:

  1. "போகிற நேரம்" வந்தால் நல்ல மனசு தானாக வரும்....

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு தெளிவா பேசுறதைப் பார்த்தா ,போதை தெளிந்த மாதிரி இருக்கே !
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி சொன்னீங்கன்னா மீண்டும் போயிடப்போறார்....அந்த கடைக்கு...

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!