வெள்ளி, மார்ச் 14, 2014

எதுவா இருந்தாலும் நாங்க இப்படித்தான் பேசுவோம்







நபர் 1 :- "என்னப்பா மனுஷன் நீ, வீடு பத்திக்கிச்சுனு சொல்லிட்டு எதுவும் செய்யாம இருந்திருக்கியே,  ஃபையர் ஆபிசுக்கு ஒரு  போன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்ல?"

கஞ்சன் :- "நான் என்னங்க பண்ணட்டும் மிஸ்டுகால் கொடுத்து கொடுத்துப்பார்த்தேன் அவங்க எடுக்கவே இல்ல"

...........................................................................................................



முருகு :- " நான் தாங்க முருகு பேசறேன்"


கஸ்டமர் கேர் :- "சொல்லுங்க  என்ன விஷயம்"

முருகு:- "எங்க மாமா எங்க இருக்காருனு கொஞ்சம் சொல்ல முடியுங்களா?"

கஸ்டமர் கேர் :- "என்னங்க பேசறீங்க அதெப்படி எங்களுக்குத்தெரியும்"

முருகு :- "அட அவருக்கு ஃபோன் பண்ணா.... போன்ல இருந்து ஒருபொண்ணு அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் அப்படினு சொல்லுது..... அப்படினா அவர் எந்த எல்லையில இருக்காருனு   உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சு இருக்கும்னு நினைச்சேன் "

.........................



"நீங்கள் தொடர்புக்கொள்ளும் வாடிக்கையாளர்  தற்சமயம் பிசியாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து தொடர்புக்கொள்ளவும்"

"நீ வேற காலம் நேரம் தெரியாம எதாவது சொல்லினு இருக்காதே புள்ள. இப்ப இங்க எல்லாரும் பசியோட இருக்கிறோம் அவன சீக்கிரம் வந்து சாப்பாட்டுக்கு காசு கொடுக்கச்சொல்லு இல்லனா நடக்கறதே வேற"

பின்னர் அருகில் இருந்தவரிடம்
"நீ கவலைப்படாதே மச்சி அந்த பொண்ணுகிட்ட எல்லா விவரமும்  சொல்லிட்டேன்
மாப்பிள்ளை சீக்கிரம் வந்திடுவான்"
....................................................................

6 கருத்துகள்:

  1. ஹா... ஹா... கலக்கலான பேச்சு...

    நீங்களே தவறுதலாக (-) ஓட்டு போட்டு விட்டீர்கள்...!

    பதிலளிநீக்கு
  2. pl. visit >>>இந்த அட்வைஸ் சரிதானே http://www.jokkaali.in/2014/03/18_14.html
    காதலின் எல்லை எதுவரை ?18 +

    பதிலளிநீக்கு
  3. வீடு எரியும்போதும் மிஸ் கால் கொடுப்பவர் ,மனைவி டெலிவரி நேரத்தில் பிரசவத்துக்கு இலவச ஆட்டோ தேடுபவராய் இருப்பார் !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி கஞ்சனாய் இருந்து என்ன புண்ணியம் ஜி.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!