வெள்ளி, பிப்ரவரி 28, 2014

இவர்கள் காதலித்தால்....




மருத்துவர் :-

கண்ணால்
‘ஊசியில் மருந்து
ஏற்றுவதுபோல்
என்னுள் காதலை
மெல்ல மெல்ல ஏற்றினாய்.
இப்பொழுது......
காதல்
நோயால் நான் வாடுகிறேன்.


மளிகை கடைக்காரர் :-

ஒரு பார்வை பார்த்தாய்
‘சுக்கு நூறாகிப்போனது
என் மனம்.


கம்பியூட்டர் என்ஜினியர் :-

வைரஸ் ஏறிய
ஆப்ரேட்டிங் சிஸ்டம் போல்
அடிக்கடி தடம் மாறிப்போகிறது
என் மனம்.


சலவைதொழிலாளி:-

வெள்ளை துணியில்
நீலம் மாறியது போல்
என் மனதை
மாற்றிக்கொண்டாய்
உனதாக.


நில விற்பனையாளர் :-

பிளாட் போடுவது போல்
பகுதி பகுதியாய்
பிரித்து
பாகமிட்டாய் என் மனதை.


மீனவர்:-

வலையில்
மாட்டிய மீனாய்
துடிக்கிறேன்...
காதலில் விழுந்துவிட்ட நான்.


கோவில் அர்ச்சகர்:-

காதல் தேவதையே!
உன் கருணை வேண்டி
தினமும்
கவிதைகளால்
அர்ச்சனை செய்கிறேன்.
காதல் வரம் தாராயோ?..



கால்பந்து வீரர் :-

ஓங்கி உதைத்த பந்துகள்
எல்லாம்
கோல் போஸ்ட்டை
நோக்கியே போவது போல்
என் மனம் உன்னை நோக்கியே
ஓடி வருவது ஏனோ ?.



அறிவியல் அறிஞர் :-

புவி ஈர்ப்பு விசை
பொருட்களை ஈர்ப்பது போல்
நீயும் ஒரு காந்தமோ ?
எனை ஈர்த்துக்கொண்டிருக்கிறாய்
உன் பார்வையால்.
இதுதான் காதல் ஈர்ப்பு சக்தியோ ?.



கொத்தனார் :-

சிமெண்ட் தண்ணீர் மணல்
கலவைப்போல
நாம் ஒன்றாகக் கலந்து கட்டுவோமா?
காதலெனும் கோட்டை.



தோட்டக்காரன் :-
 kingrajasc.blogspot.com


காதல் ரோஜாவே !
தண்ணீர் இல்லையென்ற
வருத்தம் வேண்டாம்.
என் கண்ணீரை
விட்டாவது காப்பாற்றுகிறேன்
காதலிப்பாயா?.




3 கருத்துகள்:

  1. வித்தியாசமான சிந்தனை... ரசித்தேன்... மீனவர் - அனைவருக்கும் பொருந்தும்...!

    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமை ..
    'அரசியல் வாதி ..
    நாற்பது தொகுதிகளில் யார் யாரோ ..
    என் இதயத் தொகுதியில் போட்டியின்றி தேர்வு நீ மட்டும்தான் !'
    த ம 2
    என்பாரோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதியையும் சேர்த்திருக்கலாம். அருமையாக நீங்களே எழுதிவிட்டீர்களே .
      ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!