திங்கள், மார்ச் 30, 2015

இப்ப யாரு வச்சினு இருக்கா.?.....



 

கவுண்டமணி:- பளார்......
               "இதையேன்டா எங்கிட்ட கேக்கிற...ஊரு ஒலகத்துக்கே தெரியும் நாயே உனக்கு தெரியாதா?"

"அப்படி என்னண்ணே கேட்டான்? "
“கிரிக்கெட் உலக கோப்பையை இதுக்கு முன்னாடி வெஸ்ட் இண்டீஸ் வச்சிருந்தாங்கோ, பாக்கிஸ்தான் வச்சிருந்தாங்கோ இந்தியா வச்சிருந்தாங்கோ........ இப்ப யாரு வச்சிருக்காங்கனு கேட்கறான்....ஏன்டா இன்னைக்கு யாரு வச்சிருக்காங்கனு உலகத்துக்கே தெரிஞ்சுபோச்சு... நானே நம்ம தோத்துட்டோமேனு சோகத்துல இருக்கேன் கேள்வியை பாரு....கேப்மாறிக்கு....”
....................................................................... 


திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையின் பெற்றோர் அனைவரையும் வறவேற்கிறார்கள் “வாங்க வாங்க “

குசும்பர்:-  என்னங்க பன்றது வாங்க வாங்க ரொம்ப கடனா தான் ஆகுது.. ரொம்ப கஸ்டமப்பா...... பயப்படாதீங்க மொய் எல்லாம் வச்சிட்டுதான் போவேன் “
................................................................................................

அடுத்த டீம் லீடர் நீதாம்பா

1:-   “எதுக்குங்க நல்ல பெரிய அட்டைப்பெட்டியை எல்லாம் கிழிச்சு கிழிச்சு வக்கிறீங்க அப்படியே இருந்தா எதுக்காவது யூஸ் ஆகும் இல்லே...”

சர்தார்ஜி:- “நேத்து நம்ம டீம் லீடர் ‘பெரிசா என்ன கிழிச்சனு’ திட்டிட்டுப்போனார் நாளைக்கு எப்படி கேப்பார்னு பாக்கலாம் “
...............................................................................

 தலைவர் ஐடியாவும் நல்லா தானே இருக்கு.

“தலைவருக்கு கிரிக்கெட் பற்றி ஒண்ணும் தெரியாதுனு நிருபிச்சிட்டாரா எப்படி?”

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படியாவது நம்ம நாட்டில் இருந்த கிரிக்கெட் உலக கோப்பையை தட்டிப்பறித்த ஆஸ்திரேலியாவிடமிருந்து ஐநா சபையில் சொல்லியாவது மீண்டும் வாங்கி வருவோம் என்பதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அப்படினு பேசறாரே “
......................................................................

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!