வியாழன், அக்டோபர் 23, 2014

தீபாவளி பலகாரங்கள்......



“என்னங்க படைக்கிறதுக்கு 11 லட்டு தனியா எடுத்து வச்சேன் அதுல ரெண்டு லட்டு குறையுது”



“பையன் தான் மஞ்ச கலரு கார்க் பந்துல தான் கிரிக்கெட் நல்லா விளையாட முடியுதுனு சொல்லிட்டு மொதல்ல ஒன்னும் இப்ப ஒன்னும் எடுத்துக்கினு ஓடறான்”


“ ??? “
.............................................................................................................................................................

" என்னங்க எங்கப்போயி சுத்திட்டு வர்ரீங்க. உங்களுக்குனு எடுத்து வச்ச பலகாரங்களை குரங்கு கவரோட தூக்கினு ஓடிடுச்சு " 

" அப்பா ஆஞ்சநேயா! உன் மகிமையே மகிமை. என்னை காப்பாத்திட்டியே "

" ??? "
....................................................................................................................................................



மனைவி:- “தீபாவளி அதுவுமா பக்கத்து வீட்டுக்கு பலகாரங்கள் கொடுத்தது தப்பாப்போச்சு “


கணவன்:- “ஏன் ? ”


மனைவி:- “நீங்க கொடுத்த சிவப்பு முறுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சுனு சொல்றா"


கணவன்:- “ஆமாம் நான் கூட சொல்லணும்னு நினைச்சேன்... அதுக்கு எதுக்கு கோபம் ? “


மனைவி:- “ அது முறுக்கு இல்ல ஜாங்கிரி ”


கணவன்:- “ ??? “


 .........................................................................................................................................................




6 கருத்துகள்:

  1. நண்பரே இந்த துணுக்குகளை எல்லாம், உங்கள் மனைவி படிப்பாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம தான் சாப்பிடும்போது சும்மானாச்சும் ஆஹா னு சொல்லிடறமே..... அதனால படிக்க கூடாது... படிச்சா அப்புறம் கோபத்துல யாருக்கும் எதுவுமே கிடைக்காம போயிடுச்சுனா.....?

      நீக்கு
  2. முறுக்கு இல்ல ஜாங்கிரி!! ஹஹஹஹஹஹ் செம கல்லக்கல்ஸ் எல்லாமே! நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!