ஞாயிறு, ஜனவரி 19, 2014

சென்னை புத்தக கண்காட்சி

"என்னங்க அவரு ' ஸ்டால் ஸ்டாலா' தேடினு போய்கொண்டே இருக்கிறார்.... அவ்வளது அற்புதமான புத்தகத்தையா தேடறார் ... அது என்ன புத்தகம்னு நான் தெரிஞ்சிக்கலாமா சார் "



"அட நீ ஒன்னு கடுப்பேத்தாத... அவரு 'டீ ஸ்டாலை'  எங்கனு கேட்டுட்டு தேடினு போறார்"
...........................................................................................................................................................
                     

                                     வாசகர் சந்திப்பில்
                                    ...........................................


எழுத்தாளர் :  "என் புத்தகத்தை முழுசா படிச்ச ஒருத்தர் சொல்லுங்க... என் கதையிலே உங்களுக்கு பிடிச்சது எது ?"



வாசகர் :   "முற்றும் னு  கடைசியா போட்டிருந்ததே அதான் சார் "

.............................................................................................................................................................



எழுத்தாளர் :    "வாசகர்களாகிய உங்களுக்கு நான்  ஒன்று சொல்ல

ஆசைப்படுகிறேன்"



வாசகர் ஒருவர் : " சொல்றது தான் சொல்றீங்க எல்லோருக்கும்  ஸ்ட்ராங்கா


                                        காஃபி  கொண்டுவரச்சொல்லுங்க"


...........................................................................................................................................................



 "சார் நீங்க என்ன புத்தகம் வாங்கினீங்க "


" வாங்கல சார்.   'புத்தகம் வாங்காம படிப்பது எப்படி'...அப்படின்னு  ஒரு புத்தகம்  சார் ............அங்கேயே படிச்சு பார்த்தேன் "


" அப்புறம் என்ன வாங்கிட்டீங்களா".



"இல்ல சார் அதான் புத்தகம் வாங்காமலேயே ஓசியில எப்படியெல்லாம் படிக்கிறது அப்படினு தெரிஞ்சிப்போச்சு... அப்புறம் எதுக்கு காசு கொடுத்து வாங்கனும்  அதான் எதுவும் வாங்காமலேயே கிளம்பிட்டேன்....."

.............................................................................





2 கருத்துகள்:

  1. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பார்வைக்கு மிக்க நன்றி சகோதரரே.அறிமுகம் செய்த அண்ணார் அவர்களுக்கு கணிவான வணக்கங்கள் நன்றியுடன்.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!