வெள்ளி, பிப்ரவரி 21, 2014

கவிதை எழுதுவது எப்படி ?





கவிதையில பல வகை இருக்குங்க. 


 

சொந்தக்கவிதை, சுட்டகவிதை, சோகக்கவிதை, காதல்கவிதை, மொழிபெயர்ப்புக்கவிதை,மரபுக்கவிதை, குறுங்கவிதை.... எளிதில் புரியம் கவிதை, என்றுமே புரியாதகவிதை...


இப்படி பல ரகம் உண்டு. நீங்கள் கற்றுக்கொண்டப்பின் ....எழுதியபின்... அது எந்தவகை அப்படினு (நமக்கே குழப்பமாக இருக்கும் இது கவிதை தானா அப்படினு அந்தமாதிரி சமயத்துல) ஒரு போட்டி கூட வைக்கலாம் அதற்கான ஐடியாக்கள் நிறைய அப்புறம் தருகிறேன், இப்ப கவிதை எழுத மட்டும் கத்துக்கிடுங்க ஓகே வா.

‘நான் கவிஞனும் இல்லை-நல்ல
இரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா
பொம்மையும் இல்லை....

(காதலால் தான் கோடிக்கணக்கான கவிஞர் உருவாகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.)

இப்படி....காதல் கவிதைகள்


நான் ஒரு முட்டாளுங்க -என்னை
நல்லா தெரிஞ்சவங்க
நாலுபேரு சொன்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க


இப்படி தத்துவ பாடல்கவிதைகள் எழுத ஆசையா...


உங்களுக்காக மிக சிறந்த யோசனைகளை தெரிவிக்கிறேன். இதனை பயன் படுத்தி அனைவரும் கவிதை மழை பொழிய ( நாட்டுல தண்ணீர் மழைதான் பொழிய மாட்டேங்குது கவிதை மழையாவது பொழியட்டுமே ! )  கேட்டுக்கொள்கிறேன். யாராவது இதைப்பார்த்து புதுசா எழுத கத்துகிட்டா என் பிளாக் என்னுடன் சேர்ந்து மிக்க மகிழ்வுக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.


சிலபேர் எப்பொழுதும் விரக்தியாகவே பேசுவார்கள் சில பேர் மட்டம் தட்டியே பேசுவார்கள்..... இவர்களைக்கண்டு நீங்கள் அச்சப்பட வேண்டாம்.
(நல்ல பேச்சாளன் பேசும்போது எதிரில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள் அப்படி நினைச்சினு பேசுங்க தன்னால நல்லா பேச்சு வரும் அப்படினு...... சொல்லி..... நீங்க கேள்விபட்டிருப்பீங்களே அதுபோலத்தான் இதுவும்) “நாம எழுதி  யார் படிக்கப்போறாங்க’’..(ஏன்? நான் எழுதி இப்ப நீங்க படிக்கல அதுமாதிரிதான்.......{எல்லாம் உங்க தலை எழுத்து நான் என்ன செய்ய முடியும்}...அதுமாதிரி யாராவது படிச்சுதான் ஆகனும் அது அவங்க அவங்க தலையெழுத்து ).. அப்படிப்பட்ட எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள். இதோ.......


தேவையான பொருட்கள்.

1)      பேனா (எழுதுகோல் அப்படினும் வச்சிக்கலாம்) குறிப்பு :- மை பேனாவா இங்க் பேனாவா அப்படினு எல்லாம் கேட்கப்படாது. அது உங்கள் சாய்ஸ். அல்லது பென்சில்-1
பின் குறிப்பு :- ஏன் ஸ்கெட்ச்சால எழுதக்கூடாதானு அக்குறும்புக்குனாலும் கேள்வி கேட்க கூடாது.

2)      பேப்பர் ( காகிதம் அப்படினும் சொல்லலாம்)-1.                         பின் குறிப்பு :- கோடு போட்டது அல்லது கோடுபோடாதது எது வசதிப்படுதோ அது உங்கள் விருப்பம்.                            சின்ன அறிவுரை :- கோடுபோட்ட தாளையே எடுத்துக்கோங்க. கோடு போட்ட பேப்பரே நல்லது; ஏன்னா வெள்ளைத்தாளில் சிலருக்கு நேராக எழுத வராது.... நம்ம நாட்டு ரோடு மாதிரி வளைந்து வளைந்து கோணல் மாணலாக இருக்கும்.  
3)      கை ( விரல்கள் அப்படினு சொன்னாலும் ஓகே தான்)-1.          லெப்டா ரைட்டா என்பது எழுதுபவரின் வசதியை பொறுத்தது.
4)      பீலிங்க்ஸ் – தேவையான அளவு
5)      மூளை- பயன்படுத்தினால் நல்லது.
6)      கம்பியூட்டரில் எழுதுபவர்களுக்கு தேவையானவை :-  முதல் இரண்டை தவிர்த்து 3,4,5,ஆகியவற்றுடன் மவுஸ், கீபோர்ட், மானிட்டர்...போன்றவை.

எல்லாம் எடுத்தாச்சா....
பீலிங்க்ஸ் வரல....மூளைக்கு நான் எங்க போவேன்? அப்படினு யாரும் சொல்லக்கூடாது.

ஓகே. இப்ப நாம கவிதை எழுத ரெடி ஆயிட்டோம்.

இப்ப பேப்பரை எடுத்துக்கோங்க.

உங்க குல தெய்வத்தை ஒரு தபா கும்பிட்டுக்கோங்க. (கடவுளே நான் எழுதுவது என்னவென்று தெரியாமல் எழுதுகிறேன். என்னை மன்னியும்... இதை படிப்பவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது நீ தான் காப்பாத்தனும்)
 என்ன கடவுளிடம் வேண்டியாச்சா....
ரெடி .
இப்பதான் உங்க கவனம் பூரா கவிதை எழுதுவதில் இருக்கனும். அடுப்புல சோறு என்ன ஆச்சு... பையன் எங்க போனான். ஆமா..... வீட்டுக்காரரை
இன்னும் காணலியே...மாமியார்கிட்ட என்ன சண்டை போடலாம்  அப்படி இப்படி கவனத்தை சிதற விடாதீங்க....அப்புறம் கவிதை கன்றாவியா ஆயிடும்.
முக்கியமா செல்போனை ஆஃப் செய்து வைத்து விடவும்.
ஜூட்...
முதலில் ஒன்னு போடுங்க ‘1
அப்புறம் அதற்கு மேல் கோடு ‘ – ‘ இப்படி.
அப்புறம் கீழ் வளைகோடு . இப்ப  ‘க எழுதியாச்சு. ( இதான் ‘க வா அப்படினு பள்ளிக்கூடம் போகாதா நாட்டாமை மாதிரி கேட்கக்கூடாது.)

அடுத்தது

ஒத்த சுழி கொம்பு மாதிரி ஒரு வளைகோடு அதனை இணைத்து அடிக்கோடு பின்னர் மேல் நோக்கி ஒன்று இப்ப... வந்துள்ளது ‘வ’. இதற்கு மேல் சுழி இட்டால் ‘வி.
அடுத்தது ரெண்டு சுழி ன போட்டு கொஞ்சம் முனையை வளைச்சு விடுங்க. அடுத்தது ‘கபோட்டதுபோல் போட்டு கீழ் வளைகோடு ஒன்னு போடுங்க இப்ப வந்துள்ள எழுத்து ‘தை
‘கவிதை

  ....நீங்க “கவிதை எழுதிட்டீங்க.


 நல்லா ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லாம  படிச்சுப்பாருங்க .
க.....வி.....தை. ரெடி.

என்னங்க ‘கவிதைஎழுத கத்துகிட்டீங்களா .

அட்டகாசமா எழுதி எல்லோரையும் அசத்துங்க. மீண்டும் அடுத்த வகுப்புல வேற தலைப்போட சந்திக்கலாம், வணக்கம் கூறி  விடைபெறுவது உங்கள் அன்புள்ள....

5 கருத்துகள்:

  1. இந்த பகிர்வு ஏற்கனவே வந்து விட்டது தோழரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் அண்ணார் அவர்களே ! நேற்று சும்மா டெம்ப்லேட்டில் செட்டிங்க்ஸ் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஏதோ தவறுதலாக நடந்திருக்கிறது.

      நீக்கு
  2. #கோடு போட்ட பேப்பரே நல்லது; ஏன்னா வெள்ளைத்தாளில் சிலருக்கு நேராக எழுத வராது.... நம்ம நாட்டு ரோடு மாதிரி வளைந்து வளைந்து கோணல் மாணலாக இருக்கும். #
    உங்கள் பதிவின் மூலமே கவிதை எழுத கோடு போட்டு கொடுத்து விட்டீர்கள் ,ஒன்றும் கவலைப் படாதீங்க ..நாங்க ரோடைப் போட்டுக்கிறோம் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. தங்களின் வருகை எமக்கு மிக்க பெருமை ஐயா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!