வெள்ளி, டிசம்பர் 21, 2012

உலகம் அழிய போகுதே.....




இரண்டாயிரமாவது  ஆண்டில்
உலகம் அழியும் என்று சொன்னார்கள்
நினைவிருக்கிறதா?
அப்ப என்ன நடந்தது தெரியுமா?
தினம் தினம்
பக்கத்து வீட்டில்
பலகாரம்...பாயாசம்
பிரியாணி...பர்கர் தான்
அட ‘போகப் போகிறோம்
அனுபவிச்சுட்டு போய் சேர்வோமே என்றார்கள்.
இன்று-
நாலு நாளைக்காவது
நாக்குக்கு ருசியா சாப்பிட்டு இருக்கலாம்.
நாசம் பண்ணி விட்டார்கள் அந்த
நாசா க்காரர்கள்.
நாசமாப் போக......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!