எழுத நினைக்கிறேன்
ஏனோ மறுக்கிறது மனம்.
எதை எழுதுவது
எண்ணங்கள்
தோன்றவில்லை.
எண்ணியது ஏதோ ஒன்று
எழுதுவது ஏதோ ஒன்று.
ஒன்று மாற்றி ஒன்று
ஒட்டாமல் போனது
வார்த்தைகள்.
எண்ணியது எதுவாக
இருக்கும் ?
கவிதை....?
எழுதியது என்ன ..?
எனக்கு
எண்ணத்தோன்றவில்லை
கவிதை என்று இதனை...
காரணம்...
கவியென்றால் கரு
இருக்க வேண்டும் -இக்
கவிக்கு கரு என்ன ..?
கரு இருந்து
கவியானால்
காலம் போற்றும்.
வார்த்தை ஜாலத்தால் –கவியை
வளைக்க முடியாது-அது
வெற்றுக்கவிதை.
கண்,காதல்,கிளி,கோவில்
பணம்,பாவை,பிறர்,புயல்
மண்,மான்,மேகம்,மொழி
வண்ணம்,வானம்,விலைவாசி,வீரம்
இப்படி
கரு
எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.
இன்னும் எனக்குப் பிடிபடவில்லை
இதைத்தான் எழுத போகிறேன் என்று.
அனுபவம் எழுதினால் –
அடுத்தவற்கு
அடுத்தடுத்து உதவும்.
இலக்கியம் எழுதினால் –
படிப்பவற்கு
இனிமை கொடுக்கும்.
இப்படி எதுவே
இல்லாமல்
எப்படி
என்னால் எழுத
முடிகிறது.
என் எண்ணத்தை
மேம்படுத்த வேண்டும்.
எப்படியேனும்
எதையாகிலும்
எழுதிவிட
கவிதையென்று.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!