சனி, டிசம்பர் 01, 2012

அப்பாடா வழிகிடைத்தது.......!




கடித்துவிடுமோ பயத்தில்
   நான் நிற்க !
அடித்து விடுவோனோ பயத்தில்
    அது நிற்க !
எதிரும் புதிருமாய்
    நானும் நீயும் .
யாருக்கு யார் வழிவிடுவது ?


என் பின்னால் யாரோ வர
என் பலம் அதிகமானதாக
எனக்கு நினைப்பு.
உனக்கும் அப்படித் தோன்றி இருக்கலாம்?....
அதனால் தான் நீ திரும்பி பின்னால் ஓட
நான் நிம்மதியுடன் நடந்தேன்.
அப்பாடா வழிகிடைத்தது.......!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!