கடித்துவிடுமோ பயத்தில்
நான் நிற்க !
அடித்து விடுவோனோ பயத்தில்
அது நிற்க !
எதிரும் புதிருமாய்
நானும் நீயும் .
யாருக்கு யார் வழிவிடுவது ?
என் பின்னால் யாரோ வர
என் பலம் அதிகமானதாக
எனக்கு நினைப்பு.
உனக்கும் அப்படித் தோன்றி
இருக்கலாம்?....
அதனால் தான் நீ திரும்பி
பின்னால் ஓட
நான் நிம்மதியுடன்
நடந்தேன்.
அப்பாடா வழிகிடைத்தது.......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!