ஆத்திச்சூடி
ஔவையார்
அருளியது.முழுதும் படிக்கலாம் வாங்க.
ஒற்றை வரியில் உலக கருத்துக்களை அடக்கியது எவ்வளவு சிறப்பு.
இரட்டை வரி திருக்குறள் போல்........
1.
அறம் செய விரும்பு
2.
ஆறுவது சினம்
3.
இயல்வது கரவேல்
4.
ஈவது விலக்கேல்
5.
உடையது விளம்பேல்
6.
ஊக்கமது கைவிடேல்
7.
எண் எழுத்து இகழேல்
8.
ஏற்பது இகழ்ச்சி
9.
ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அக்கஞ் சுருக்கேல்
14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து
இணங்கு
20. தந்தை தாய் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண்பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அரணை மறவேல்
31. அனந்தல் ஆடேல்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கை விடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கை வினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. சக்கர நெறி நில்
44. சான்றோர் இனத்திரு
45. சித்திரம் பேசேல்
46. சீர்மை மறவேல்
47. சுளிக்கச் சொல்லேல்
48. சூது விரும்பேல்
49. செய்வன திருந்தச்செய்
50. சேரிடம் அறிந்து சேர்
51. சை எனத் திநியேல்
52. சொல் சோர்வு படேல்
53. சோம்பித் திரியேல்
54. தக்கோன் எனத்திரி
55. தானமது விரும்பு
56. திருமாலுக்கு அடிமை
செய்
57. தீவினை அகற்று
58. துன்பத்திற்கு இடங்
கொடேல்
59. தூக்கி வினை செய்
60. தெய்வம் இகழேல்
61. தேசத்தோடு ஒத்து வாழ்
62. தையல் சொல் கேள்
63. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல்
65. நன்மை கடைப்பிடி
66. நாடு ஒப்பன செய்
67. நிலையில் பிரியேல்
68. நீர் விளையாடல்
69. நுண்மை நுகரேல்
70. நூல் பல கல்
71. நெற் பயிர் விளை
72. நேர் பட ஒழுகு
73. நைவினை நணுகேல்
74. நொய்ய உரையேல்
75. நோய்க்கு இடங் கொடேல்
76. பழிப்பன பகரேல்
77. பாம்பொடு பழகேல்
78. பிழைபடச் சொல்லேல்
79. பீடு பெற நில்
80. புகழ்ந்தாரைப் போற்றி
வாழ்
81. பூமி திருத்தி உண்
82. பெரியாரைத் துணைக்
கொள்
83. பேதமை அகற்று
84. பையலோடு இணங்கேல்
85. பொருள் தனைப் போற்றி
வாழ்
86. போர் தொழில் புரியேல்
87. மனம் தடுமாறேல்
88. மாற்றானுக்கு இடம்
கொடேல்
89. மிகைபடச் சொல்லேல்
90. மீதூண் விரும் பேல்
91. முனைமுகத்து நில்லேல்
92. மூர்க்க ரோடு
இணங்கேல்
93. மெல்லினல்லாள்
தோள்சேர்
94. மேன்மக்கள் சொல் கேள்
95. மைவிழியார் மனை அகல்
96. மொழிவது அறமொழி
97. மோகத்தை முனி
98. வல்லமை பேசேல்
99. வாது முற்கூறேல்
100.
வித்தை விரும்பு
101.
வீடு பெற நில்
102.
உத்தமனாய் இரு
103.
ஊருடன் கூடி வாழ்
104.
வெட்டெனப் பேசேல்
105.
வேண்டி வினை செயேல்
106.
வைகறைத் துயில் எழு
107.
ஒன்னாரைத் தேரேல்
108.
ஓரம் சொல்லேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!