அறிஞர் அண்ணாவின் தமிழ் பணி
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார்.
அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன்
உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில்
காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை
விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
கல்வி
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)[1] , மற்றும் அதனைத் தொடர்ந்து
முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்[2] பட்டப்படிப்புகளை சென்னை
பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன்
உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்[3] . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி
பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு
கொண்டார்.[பேச்சாற்றல்
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும்
தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவாரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை
இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை
முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக
வெளிப்படுத்தினார்.
மொழிப்புலமை
ஒரு தடவை சில
இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை
மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர்.
அதற்கு அவர்,
“
|
"No
sentence can begin with because because, because is a conjunction.
எந்த
வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு முடியாது. அவ்வார்த்தை ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."
|
”
|
என்று உடனே
பதிலளித்தார்.
இலக்கிய பங்களிப்புகள்
அண்ணாதுரை மிகச்
சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[3]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்)
வளத்துடன் பேசும் திறன் பெற்றவர்.
எழுத்தாற்றலும் பெற்றவர்[28].பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களும், நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[3]. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்[29].
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948) இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்[29]. அவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இவைகள் திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன[30].
வேலைக்காரியில் அணணதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது[14].
இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின.[30]. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள் டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்[17].
அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதம் (தண்டம்)[31] விதிக்கப்பட்டது. சிறைத்தண்டணையும்[17] அளிக்கப்பட்டது.
அறிஞர் அண்ணாவின்
புனை பெயர்கள் சௌமியன்,பரதன்,நக்கீரன்,வீரன்,குறும்,போன்,துரை,வீனஸ்,சமதர்மன்,ஒற்றன்,நீலன்,ஆணி,சம்மட்டி,காலன்,பேகன்,வழிப்போக்கன்,சிறைபுகுந்தோன்,குறிப்போன்,கொழு,குயில், கீரதர்
அறிஞர் அண்ணாவின்
நகைச்சுவை
திருவள்ளுவர் படமும், திருக்குறளும்
பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து
எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு
பதிலளித்தார்.
ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.
பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று
குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற
பொதுமக்களுக்காகவா?
இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது!
டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.
பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.
இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல - மிகவும் நுணுக்கமானதுமாகும்.
நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.
நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.
இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத்
தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல்
எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
இது அவரிடம்
மிகுதியாக அமைந்திருந்தது.
பொன்மொழிகள் சில
சட்டம் ஓர்
இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை.
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும், மறப்போம் மன்னிப்போம்.
எதையும்
தாங்கும் இதயம் வேண்டும்.
அறிஞர் அண்ணாவின் நூல்கள்
1. ரோமாபுரி ராணி2. கம்பரசம்3. குமரிக்கோட்டம்4. விடுதலைப்போர்5. கற்பனைச்சித்திரம்6. சிறுகதை
7. ஆரியமாயை8. உலகப்பெரியார்9. ஜமீன் இனாம் ஒழி்ப்பு10. பணத்தோட்டம்11. தீ பரவட்டும்12. 1858-1948
13. அறப்போர்14. இலட்சிய வரலாறு15. வர்ணாஸ்ரமம்16. ரேடியோவில் அண்ணா
17. நிலையும் நினைப்பும்18. தாழ்ந்த தமிழகம்19. மே தினம்
13. அறப்போர்14. இலட்சிய வரலாறு15. வர்ணாஸ்ரமம்16. ரேடியோவில் அண்ணா
17. நிலையும் நினைப்பும்18. தாழ்ந்த தமிழகம்19. மே தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!