நீ
தினமும்
என்னை பார்க்கிறாய் - என்பது
எனக்கும் தெரியும்
உனக்கும் தெரியும்
ஏனோ முகம் மறைத்துக்கொள்கிறோம்.
நண்பர்கள் என்ற போர்வையில்....
என்னை உனக்கும் பிடிக்கும்
உன்னை எனக்கும் பிடிக்கும்
ஆயினும் - நாம்
அலட்டிக்கொள்வதில்லை
எதிரிகளாய்...
ஏனோ ஒப்புக்கொள்ள மறுக்கிறது
மனம்-நமக்குள்
உறவும் இல்லை, பகையும் இல்லை.
இது தான் இன்றைய
உலகம்.
ஆயுனும் நாம் நண்பன் என்று
பரை சாற்ற வேண்டியிருக்கிறது
மற்றவருக்காக.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!